Close Menu
    What's Hot

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!
    Featured

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ’கல்ட் கிளாசிக்’ அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. கா லப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘மூடர் கூடம்’. 13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ‘மூடர் கூடம்’, தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

    முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி, கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் முதல் லுக் போஸ்டரில், பனியால் மூடப்பட்டுள்ள ஒரு பகுதியில் நான்கு ஆயுதம் ஏந்திய கதாபாத்திரங்கள், சாத்தியமற்ற ஒரு பணிக்குத் தயாராக நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் விரிவான களத்தையும், அதிக சவால்களையும் போஸ்டர் காட்டுகிறது. அதே நேரத்தில், கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, ’ஹேப்பி லைஃப்’ என்ற வாசகத்துடன் காட்சியளிக்கும் டெடி பேர், படத்தின் தனித்துவமான நகைச்சுவை உணர்வை காட்டுகிறது. அதோடு, ‘மிஷன்: பாஸிபிள்’ என்ற சப்டைட்டில், படத்தின் நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இந்தப் படம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் காட்சியமைப்பு மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்கக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், படத்தின் கற்பனை உலகமும், அதிரடி காட்சிகளும் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்களுக்கும் சிறந்த திரையங்க அனுபவம் கிடைக்கும்.

    இதுகுறித்து இயக்குநர் நவீன் ஹிதயத் பகிர்ந்து கொண்டதாவது, “’மூடர் கூடம்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வந்தனர். வெறுமனே சீக்வலுக்காக நான் இந்தப் படத்தை உருவாக்க விரும்பவில்லை. ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ அந்தக் கதையாக அமைந்தது. ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையைத் தக்கவைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களையும், கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்தக் கதையை நம்பி, முழு சுதந்திரத்துடன் இப்படத்தை உருவாக்க உதவிய தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ராவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

    தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு கல்ட் கிளாசிக் படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பு. நவீன் இந்தக் கதையை எங்களிடம் கூறியபோது, இது வெறும் இரண்டாம் பாகம் மட்டுமல்ல, ரசிகர்கள் விரும்பிய ஒரு திரைப்படத்தை இன்னும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்தக் கனவை நனவாக்குவதற்காக அனைத்துத் துறையினரும் கடுமையாக உழைத்துள்ளனர். இன்று முதல் தோற்றத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ‘மூடர் கூடம் 2: மிஷன்: பாசிபிள்’ திரைப்படம், பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான, பொழுதுபோக்கு நிறைந்த மற்றும் முற்றிலும் புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.

    இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார். அதியப்பன் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் ரத்தினம் MPSE ஒலியமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.ஏ. பாட்சா தலைமையிலான சர்வதேசக் குழு, விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.

    கிராண்டல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரித்துள்ள ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’, தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல உள்ளது. ஏற்கனவே முதல் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?
    Next Article மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!
    Editor web4

    Related Posts

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    August 6, 2026

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    August 6, 2026

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!

    இனி யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணமா..?? ஆளுநரின் முக்கிய விளக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.