Close Menu
    What's Hot

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு பின்வாங்காது.. அமைச்சர் என்.ஆனந்த் உறுதி..!!
    Featured

    காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு பின்வாங்காது.. அமைச்சர் என்.ஆனந்த் உறுதி..!!

    editor5By editor5August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 15 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது மேகதாது அணை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய அவர், காவிரி நீரே டெல்டா மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முதன்மையான ஆதாரம் என வலியுறுத்தினார்.

    உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணையம் மூலம் தமிழ்நாட்டின் உரிமை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருடன் ஆகஸ்ட் 3 அன்று சந்திப்பு திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நாள் உகந்ததல்ல என கர்நாடகத் தரப்பு தெரிவித்ததால் அது நடைபெறவில்லை. ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு தனது உரிமையை வலுவாக முன்வைத்தது.

    இதையடுத்து, ஜூலை 29 முதல் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. எனினும் கர்நாடகா விகிதாசார அடிப்படையில் நீரை விட்டபோதும் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டதாக தமிழ்நாடு சுட்டிக்காட்டியது. ஜூலை 30 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டத்தில் குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டாலும், கர்நாடகா அதை முழுமையாக அமல்படுத்தவில்லை. 3,500 கன அடிக்குப் பதிலாக வெறும் 144 முதல் 619 கன அடி வரை மட்டுமே நீர் வந்ததால் பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.

    இதனால் ஆகஸ்ட் 12க்குள் நீர் வர வேண்டும், ஜூன் 1 முதல் ஜூலை 28 வரையிலான நிலுவை நீரையும் உடனடியாகத் திறக்க வேண்டும், பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும் என ஆணையத்தை தமிழ்நாடு வலியுறுத்தியது.முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 3 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 6 நிலவரப்படி தமிழ்நாடு பெற்ற நீர் வெறும் 4.947 டி.எம்.சி மட்டுமே. இதனால் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை உருவாகியுள்ளது.

    கர்நாடகாவில் நீர் வரத்து அதிகரித்துள்ளபோதும் இந்நிலை தொடர்கிறது. காவிரி விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த், நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சூழலைக் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் எனவும் கூறினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பாதுகாத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.

    minister anand tn assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்ட்..! திரும்ப பெற்ற சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்..!
    Next Article குதிரைபேர வழக்கு… மேலும் ஒருவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!
    editor5

    Related Posts

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    August 7, 2026

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    August 7, 2026

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    UPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.