Close Menu
    What's Hot

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு
    Featured

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    Editor web2By Editor web2August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Electric Bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், அதற்கு நேர்மாறாக அரசு சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது சமூகநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார்.

    சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தனியார் கூட்டாண்மையில் செயல்படுத்தப்படவுள்ள ஐந்து முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார பேருந்துகள் இயக்கம், மாணவர் விடுதிகள், கோவை–அரியலூர் மின் வழித்தடம், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்கள் ஆகியவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    குறிப்பாக, அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் இயக்கும் முறை விரிவுபடுத்தப்பட்டால், எதிர்காலத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அரசு பணியிடங்கள் முற்றிலுமாக குறையும் என்றும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போகும் என்றும் அன்புமணி எச்சரித்தார்.

    ஏற்கனவே பல்வேறு துறைகளில் அவுட்சோர்சிங் முறை நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கூறிய அவர், பணியாளர்களின் உழைப்பையும் ஊதியத்தையும் தனியார் நிறுவனங்கள் சுரண்டுகின்றன என்றும், தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

    015 anbumani

    மேலும், அரசு சேவைகள் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டால், இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது; சமூகநீதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்த அன்புமணி, உலக வங்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப தனியார்மய நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தினார்.

    இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் போன்ற சமூகநீதிசார் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்புகளையும் சமூகநீதியையும் பாதிக்கும் தனியார்மய திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    AnbumaniRamadoss GovernmentJobs Privatisation tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleUPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!
    Next Article விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!
    Editor web2
    • Website

    Related Posts

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    August 7, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.