Close Menu
    What's Hot

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’
    Featured

    ’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’

    Editor web2By Editor web2August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘வெற்றி 150 நாள்’ திட்டத்தின் மூலம் தமிழக வெற்றிக் கழக அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டதாகவும் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்றும் குற்றம்சாட்டினார்.

    “மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டோம்; தொட்டால் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று அரசு கூறுகிறது. ஆனால், சனிக்கிழமைகளில் பனையூரில் நடைபெறும் வாரச்சந்தைக்கு வருபவர்கள் அனைவரும் இதற்கு முன் ‘தொட்டவர்கள்’ தான்” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

    மேலும், “வெற்றி 150 நாள் திட்டம் மூலம் ஒன்றிய அரசிடம் தவெக அரசு அமைதியாக சரணடைந்துவிட்டது. தேர்தலில் சத்தமில்லாமல் வந்தது போலவே, மத்திய அரசிடமும் சத்தமில்லாமல் சரணடைந்துள்ளது” என்று அவர் விமர்சித்தார்.

    நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் வாசித்ததையும், வேளாண் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து லட்டு, புளியோதரையுடன் வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ததையும் சுட்டிக்காட்டிய ரகுபதி, “ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கை வழியில் வந்தவர்கள் நாங்கள்” என்றார்.

    Ragupathi Ragupathi

    திமுக தலைவர் குறித்து கூறிய அவர், “அவரை காணவில்லை என்று சொல்பவர்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், விடியல் பயணத் திட்டங்களில் அவர் இருக்கிறார் என்று சொல்கிறோம். ‘விடியல்’ என்ற பெயர் பிடிக்காததால் அந்தச் சொல்லைத் திட்டங்களில் இருந்து நீக்கியுள்ளீர்கள். மீண்டும் தமிழகத்தில் விடியலை நாங்கள் கொண்டு வருவோம்” என்றார்.

    ‘அண்ணன் சீர்’ திட்டம் குறித்து பேசுகையில், “ரூ.832 கோடியில் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இரண்டு முதல் மூன்று லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் இது. ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.1.05 லட்சமாக உள்ளது. புடவை விலை சேர்த்தாலும், குறைந்தபட்சம் ரூ.2,000 கோடி தேவைப்படும்” என்று அவர் கணக்கிட்டு விளக்கினார்.

    மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், மின் கட்டண உயர்வு, மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் ரகுபதி தெரிவித்தார்.

    AnnanSeer DMK TamilNaduBudget TVKGovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபரபரப்பான நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு!!
    Next Article ஓவர் ரேட்டுக்கு மது விற்றால் தப்ப முடியாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!!
    Editor web2
    • Website

    Related Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    August 7, 2026

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    August 7, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.