Close Menu
    What's Hot

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ராணுவம் பற்றி வார்த்தை விட்ட செல்லூர் ராஜூ.. வலுக்கும் கண்டனம்…
    இந்தியா

    ராணுவம் பற்றி வார்த்தை விட்ட செல்லூர் ராஜூ.. வலுக்கும் கண்டனம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    750x450 755019 untitled
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பாங்கரவாதிகளின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிக்க, அமெரிக்கா தலையீடின் படி இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இந்திய ராணுவ வீரர்களின் சாதனை அளப்பரியது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
    இதனை விமர்சிக்கும் விதமாக, பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டுமே தவிர இந்திய ராணுவத்திற்கு அல்ல, என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசு தான்.”பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    செல்லூர் ராஜூவின் இத்தகைய கருத்தை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். அதேப் போல அரியலூரிலும், செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லூர் ராஜூவுக்கு எதிராக தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதப்படை நல மற்றும் மறுவாழ்வு சங்கமும் போராட்டம் அறிவித்துள்ளது.

    sellur raju
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபல்கலை. வேந்தரை அரசே நியமிக்கும் விவகாரம்…. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
    Next Article துருக்கி ஆதரவு பெற்ற பாகிஸ்தானுக்கு பதிலடி: துருக்கி ஆப்பிள்கள் புறக்கணிப்பு — புனே வியாபாரிகளின் தேசபக்தி நடவடிக்கை!!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    May 30, 2026

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    Trending Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.