Close Menu
    What's Hot

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கர்னூலில் வைர வேட்டை: வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதாகக் குற்றச்சாட்டு!
    இந்தியா

    கர்னூலில் வைர வேட்டை: வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதாகக் குற்றச்சாட்டு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250527 WA0015
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பத்திகொண்டா பகுதியில், மழைக்காலத்தில் வைரக் கற்கள் கிடைப்பதால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வைர வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வைர வேட்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பத்திகொண்டா சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மூன்று வியாபாரிகள் கூட்டணி அமைத்து வைரக் கற்களைக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

     

    வைரக் கற்கள் கிடைக்கும் பகுதிகள்

    “ராயல் சீமா ரத்னால சீமா” என்ற தெலுங்குப் பழமொழிக்கு ஏற்ப, ரத்தினங்கள் நிறைந்த பகுதியாக ராயல் சீமா திகழ்கிறது. கர்னூல் மாவட்டம் ராயல் சீமா மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள பத்திகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள், காடுகள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் வைரக் கற்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

     

    வைர வேட்டை தீவிரம்

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் கர்னூல் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து வைரக் கற்களைத் தேடுவார்கள். தற்போது வைரக் கற்கள் எளிதாகக் கிடைப்பதாகக் கருதி, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காகக் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கரண்டிகள் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு நிலத்தை அங்குலம் அங்குலமாகத் தோண்டி வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

     

    குறைந்த விலைக்கு வாங்கப்படும் வைரங்கள்: குற்றச்சாட்டு

    சமீபத்தில் பத்திகொண்டா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு வைரக்கல் கிடைத்ததாகவும், அதை அவர் ₹30 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த வைரக்கல்லின் சந்தை மதிப்பு சுமார் ₹1 கோடி வரை இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பேசிக்கொள்கின்றனர். பத்திகொண்டா சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மூன்று வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வைரக் கற்களை அவற்றின் உண்மையான மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

     

    நீண்டகாலமாகவே இந்தப் பகுதியில் பொதுமக்களும் வெளியூர் நபர்களும் வைர வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Diamond Karnool
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடுரோட்டில் போலீஸ் அராஜகம்… இளைஞர்களுக்கு ‘போலீஸ் ட்ரீட்மென்ட்’ – பொதுமக்கள் கொந்தளிப்பு!!
    Next Article நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு: தேர்வு ஒத்திவைப்பு!
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.