Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மூணாறு மக்களை மிரட்டும் படையப்பா யானை
    தமிழ்நாடு

    மூணாறு மக்களை மிரட்டும் படையப்பா யானை

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2025Updated:June 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 03 120051
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு தேயிலைத் தோட்டபகுதிகளில் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வரும் படையப்பா யானை..

    கடந்த இரண்டு மூன்று தினங்களாக மூணாறு அருகில் உள்ள மாட்டுப்பட்டி, குண்டலை, செண்டு வாரை, அருவி காடு தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் படையப்பா ஒற்றை யானையைகண்டு தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் பொதுமக்கள் அச்சம்.

    அரிக்கொம்பன் யானைக்குப் பிறகு கேரளா இடுக்கி மாவட்டத்தின் செல்லப் பிள்ளையாக கருதப்பட்டாலும்,ஒற்றையாக சுற்றித் திரியும் யானையை கண்டு தேயிலை தோட்டத் தொழிலாளிகள் குடியிருப்பு வாசிகள் கலக்கம்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சுற்றுப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளில் மீண்டும் கேரள இடுக்கி மாவட்டத்தின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் படையப்பா யானையின் நடமாட்டம் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக மாட்டுப்பட்டி அணை மற்றும் அருவிக்காடு பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து கொண்டிருந்த படையப்பா யானை தற்போது பகல் நேரங்களிலும் குண்டலை,செண்டுவாரை போன்ற பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட பணியாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    அரிக்கொம்பன் யானையை தமிழகத்தில் உள்ள வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டதற்குப் பின்பு தற்போது நீண்ட தந்தங்களுடன் காண்போரை கதிகலங்க வைக்கும் வகையில் தோற்றமளிக்கும் படையப்பாவின் ராஜ்ஜியம் கேரளா மூணாறு சுற்றுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக குண்டலை ரேஷன் கடை, மருத்துவமனை பகுதி அருகில் படையப்பா யானையின் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தோட்டப்பணிக்கு செல்பவர்கள் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு சொல்பவர்கள் குறிப்பாக சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இப்பகுதியில் செல்ல வேண்டுமென்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
    மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித்திரிந்தாலும் இதுவரை படையப்பா யானை பொது மக்களை தாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படையப்பா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது படையப்பா யானை சுற்றித் திரியும் வீடியோ மூணாறு வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    elephant human conflict forest department Tamil Nadu Kerala Tamil Nadu border elephant man-animal conflict India Moonnar elephant attack Padayappa elephant Padayappa latest news Padayappa Munnar Tamil Nadu wild elephant news wild elephant Tamil Nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு – இனி முழுநேர அரசியல்வாதியாக திரையுலகை விட்டு விலகும் விஜய்!”
    Next Article – முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.