Close Menu
    What's Hot

    வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ஆன்மீகம்»மதுரை மாநகர் வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை!- சித்திரைத் திருவிழா கோலாகலம்!
    ஆன்மீகம்

    மதுரை மாநகர் வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை!- சித்திரைத் திருவிழா கோலாகலம்!

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mdu 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் வந்தடைந்த கள்ளழகருக்கு திரளான பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.

    சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.

    இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 18ம்படி கருப்பண சுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என முழக்கங்கள் எழுப்பி பரவசமடைந்தனர்.

    இன்று (30.04.2026) காலை மதுரை மாநகருக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை அளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தல்லாக்குளம் பெருமாள் கோயிலை அடையும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை (01.05.2026) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் நடைபெற உள்ளது. தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2ம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தரும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப நிவர்த்தி அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோல நிகழ்வும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3ம் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெற உள்ளது. 4ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 5ம் தேதி அழகர்மலையை அடைகிறார். 6ம் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை!
    Next Article தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!. இன்றைய விலை நிலவரம் இதோ!
    Editor TN Talks

    Related Posts

    வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

    July 20, 2026

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.