நாமக்கல்ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
நாமக்கல் நகரில் மையப்பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்ச நேயர்  இரு கைகளையும் குப்பியவாறு சாந்த சொரூபியாக  பக்தர்களுக்கு அருள் பாளித்து வருகிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று ஆண்டுதோறும் நாமக்கல்லிலும் அனுமன் ஜெயந்தி விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் இன்று அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, அதிகாலை 4.40 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப் பட்டது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர் அனைவரும் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் என கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து   ஆஞ்சநேயருக்கு பால் வெண்ணெய் சந்தனம் சீயக்காய் திருமஞ்சனம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 2 மணி அளவில் தங்க காப்பு அலங்காரம் செய்ய உள்ளனர் அதனை தொடர்ந்து மாலை தங்க தேர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவை முன்னிட்டு நாமக்கல் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது மேலும் நாமக்கல் மற்றும் அல்லாது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரின் அருளை பெற்று வருகின்றனர்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version