மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், உலக நாயகனுமான கமல்ஹாசன் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது

இந்தச் சந்திப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தச் சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கான கோரிக்கைகள்: தமிழ் சினிமா துறையின் மேம்பாட்டை முன்னிறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் நேரில் கொடுத்துள்ளேன். நன்மை மலரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் இருந்து வந்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யிடம், மூத்த திரைக்கலைஞரான கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version