தமிழ் திரையுலகின் என்றென்றும் நிலைத்திருக்கும் காவியங்களில் ஒன்றான ‘திருவிளையாடல்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் (ஜூலை 31) 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் இசைப்பேரொளி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இணைந்து நடித்த இப்படம், கடந்த 1965-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தை இயக்கியதுடன் நின்றுவிடாமல், “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவனின் பேராற்றலையே எதிர்த்து கேள்வி கேட்கும் நக்கீரர் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருப்பார்.

சிவபெருமானாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கம்பீரமான நடிப்பும், பார்வதி தேவியாக சாவித்திரியின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தவை. ஏ.பி.நாகராஜனின் தத்துவார்த்தமான வசனங்களும் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் திரைக்காவியங்களில் ஒன்றான ‘திருவிளையாடல்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கலை, பக்தி, இலக்கியம் மற்றும் சுவாரஸ்யமான சுவைமிகு திரைக்கதை ஆகியவற்றின் சங்கமமாக ‘திருவிளையாடல்’ திரைப்படம் விளங்குகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version