பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல சீரியல் நடிகையாக இருந்தவர் நந்தினி. பெங்களூருவில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வந்த இவர், இன்று (டிசம்பர் 29) கெங்கேரியில் உள்ள தனது ஹாஸ்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நந்தினி, பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, 2019 முதல் சின்னத்திரையில் பயணிக்கத் தொடங்கினார்.

கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்த நந்தினி, தமிழில் ‘கௌரி’ தொடர் மூலம் பிரபலமானார். நந்தினியின் தந்தை 2023-ல் காலமானார். அதைத் தொடர்ந்து, அவருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால், நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தினால் அவர் அந்த அரசு வேலையை ஏற்க மறுத்துவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version