கோலிவுட் வட்டாரத்தில் தற்பொழுது வெடித்துள்ள விவாகரத்து மற்றும் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகள், முன்னணி நட்சத்திரங்களுக்கு இடையேயான மோதலாக உருவெடுத்துப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், தனது சொந்த வாழ்க்கை விவகாரங்கள் குறித்துப் பேசும்போது, தமிழ் சினிமாவின் ‘மூன்றெழுத்து’ இட்லி நடிகை ஒருவரே தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சீரழித்தார் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஒரு வெடிகுண்டை வீசியிருந்தார்.

ரவி மோகனின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு வெளியான சில நிமிடங்களிலேயே, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மிகவும் காட்டமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த உலகத்தில் உள்ள சில மனிதர்கள், தங்களது தரம் குறைந்த மரபணுவை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். உங்களைப் பற்றி நான் முன்பு கணித்துக் கூறியது எவ்வளவு உண்மையானது மற்றும் சரியானது என்பதை, இப்போது நீங்களாகவே பொதுவெளியில் நிரூபித்துக் காட்டியதற்கு எனது நன்றிகள்!” இவ்வாறு யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், ஆனால் ஜெயம் ரவியைத் தாக்கும் விதமாக குஷ்பு மிகத் தந்திரமாகப் பதிவிட்டுள்ளார்.

இரு தரப்பிலும் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அடுத்தடுத்த நிமிடங்களில் நிகழ்ந்த இந்த வார்த்தைப் போர், அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட  மோதல்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version