பொதுமக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு கூடுதல் வரி அல்லது புதிய கட்டணங்களை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மைக்காலமாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இதில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திய அரசின் இந்த புதிய வரி விதிப்பு ஆலோசனைக் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ்பிரஸ் பக்கத்தில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,  “பொதுமக்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானவை. இதுபோன்ற எந்தவொரு கட்டுப்பாட்டையும் மக்கள் மீது திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்குக் கிடையாது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version