Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»‘இதைச் செய்யலைன்னா ஓட்டுக் கேட்டு போக முடியாது!’ – பரிதாபமாக புலம்பும் தென்காசி காங். எம்எல்ஏ
    தேர்தல் 2026

    ‘இதைச் செய்யலைன்னா ஓட்டுக் கேட்டு போக முடியாது!’ – பரிதாபமாக புலம்பும் தென்காசி காங். எம்எல்ஏ

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tenkasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் செய்துகொடுக்காததால் என் தொகுதி மக்கள் என்னை, ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்தத் திட்டத்தைக் கூட உன்னால கொண்டுவர முடியலையே’ என்று திட்டுகிறார்கள்” தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பழனி நாடார் தான் இப்படி புலம்பி இருக்கிறார்.

    இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டம் என்பது தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தென்காசி தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவோம்” என வாக்குறுதி அளித்தார்.

    ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளில் அதற்கான எந்த நகர்வும் நடக்கவில்லை. இந்த நிலையில், இது விஷயமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தென்காசி எம்எல்ஏ-வான பழனி நாடார், “இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் சொன்னதால் தான் கடந்த முறை நான் வெற்றி பெற்றேன்.

    ஆனால், அதற்கான வேலைகள் நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொகுதியின் முக்கியமான 10 பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக எழுதிக் கொடுக்கும்படி அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்களிடமும் முதல்வர் ஸ்டாலின் கேட்டிருந்தார். அப்போது, இரட்டைகுளம் கால்வாய் திட்டம், ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து ஊத்துமலையை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நானும் எழுதிக் கொடுத்திருந்தேன்.

    அண்மையில் தென்காசிக்கு வந்திருந்த முதல்வர் எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், தென்காசிக்காக முதல்வர் அறிவித்த 10 அறிவிப்புகளில் இரட்டைகுளம் கால்வாய் திட்டம் இல்லாமல் போனதில் நானும் எனது தொகுதி மக்களும் மிகுந்த வருத்தமடைந்தோம்.

    என் தொகுதி மக்கள், ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்த திட்டத்தைக்கூட கொண்டுவர முடியலையே’ என்று என்னைத் திட்டுகிறார்கள். இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை அறிவித்தால் மட்டும்தான் இனி தென்காசி தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டுச் செல்ல முடியும். இல்லாவிட்டால், ஓட்டுக் கேட்டுச் செல்லும்போது விபரீதம் ஏற்படும்.

    எனவே, இத்திட்டத்தை முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும். இத்திட்டத்துக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தி, கால்வாய் வெட்டித் தர அனுமதித்தால் நானே எனது சொந்தச் செலவில் கால்வாய் வெட்டிக் கொடுத்துவிடுவேன்.

    தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றிவிட்டதா என்று கேட்டால் அதற்கு என்னிடம் விடை இல்லை. நான் சொன்னால் குறை சொல்வதுபோல் ஆகிவிடும். அரசை குறை சொல்வதற்கு எனக்குத் தகுதி இல்லை. அரசு நல்ல முறையில் செயல்படுகிறது.

    காங்கிரஸ் தலைமை மூலமும் சட்டப்பேரவையிலும் பல முறை இத்திட்டத்தை வலியுறுத்திவிட்டேன். இத்திட்டம் அறிவிக்கப்படுவதாகத்தான் இருந்தது. எப்படி மாறியது என்று தெரியவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ என்பதால் என்னை ஒதுக்குகிறார்களா என்றும் தெரியவில்லை” என்றார்.

    tenkasi#mla
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
    Next Article மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.