ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஹராரேவில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 125 ரன்கள் எடுத்தது. மத்வீர் 39 ரன்களும், மருமானி 27 ரன்களும் எடுத்தனர். மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்தியாவுக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தார். 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்திய அவர், இந்திய அணியின் வெற்றியை அதிவேகமாக உறுதி செய்தார். இஷான் கிஷன் 35 ரன்களும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version