சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அரசு செவிலிய பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

”திமுக அரசு பொறுப்பேற்றப்பிறகு 8,834 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேப் போல 3009 ஒப்பந்த செலிவியர்களுக்கு பணி நியமண ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 பேரில் 2,146 செவிலியர்களுக்கு ஏற்கனவே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் 390 பேர் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், மீதமிருந்த 719 பேருக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையின் பேரில், அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கொரோனா காலத்தில் பணிபுரிந்த 719 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் செவிலியர்களின் தேவை அதிகரித்து வரும் காரணத்தினாலும், செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உலகமெங்கும் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ளது. திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உலத் தரத்திற்கு இணையாக செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட இருப்பதாக” தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version