அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர், தனது சொத்து விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு மற்றும் அவர் நடத்தி வரும் குவாரிகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான குவாரிகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படுகின்றனவா என்பதைத் தமிழக கனிமவளத்துறை அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர்கள் பலர், “திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நினைத்ததாலேயே விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார்” என்று விமர்சித்து வருகின்றனர். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தெருவில் நாய்கள் சண்டையிட்டு குரைப்பதற்கு எல்லாம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்று மிகவும் காட்டமாகப் பதிலளித்தார்.
விஜயபாஸ்கரின் அரசியல் மாற்றம் மற்றும் அவர் மீதான பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் குறித்த ஓ.எஸ்.மணியனின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
