நீட் தேர்வு வினத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கலைக்கும் விதமாக போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி நடத்தியால் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் என் இதயத்தை உடைத்து நொறுக்கியுள்ளன. ஆனால் அதே வேளையில், மாணவர்களின் மனஉறுதியைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது.” தனக்கான உரிமைகளுக்காகக் களத்தில் போராடும் ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் பெரிய நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்களின் பயணம் அடங்கியுள்ளது.”
எதிர்கால தலைமுறைக்கான குரல்: “அவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை; தங்களை ஆதரிக்கும் அனைவருக்காகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் தலைமுறைக்கு ஒரு நல்ல பாதையை உருவாக்குவதற்காகவும் போராடுகிறார்கள். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றன.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் இந்த இளைஞர்களின் குரலுக்கு நாம் உண்மையிலேயே செவிசாய்க்கிறோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக “மாணவர்களுக்காக… மாணவர்களால்… எதிர்காலம் அவர்களுக்குரியது! ஜெய் ஹிந்த்!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
