தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், ராஜினாமா செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் மாணவர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும் நான் துணை நிற்கிறேன்!
பொறுப்புக்கூறலுக்காக நான் நிற்கிறேன்!
ஜனநாயக இந்தியாவுக்காக நான் நிற்கிறேன்!
சீர்திருத்தப்பட்ட கல்வி அமைப்புக்காக நான் நிற்கிறேன் என உறுதி கூறியுள்ளார்.
சோனம் வாங்சுக், அபிஜீத் டிப்கே மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டு, ஒரு தாயாக, எங்கள் குழந்தைகள் உங்களைப் போன்றவர்களாக வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜென்-ஸெட் (Gen Z) இளைஞர்களை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ள ஜோதிகா, எதையும் மறைக்காமல், அச்சமின்றி உங்கள் குரலை வெளிப்படுத்தியுள்ளீர்கள் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “நாம்தான் இந்தியா” என்பதை நிரூபித்துள்ளீர்கள் எனக் கூறி, அழுத்தங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததற்கும், எங்களை அச்சமின்றி பேசத் தூண்டியதற்கும் நன்றி. ஜெய்ஹிந்த் எனத் தெரிவித்துள்ளார்.
ஜோதிகாவின் இந்தப் பதிவுக்கு 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.
