Close Menu
    What's Hot

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மீண்டும் ஒன்றிணைந்த அதிமுக அணிகள்..!! சபாநாயகரை சந்தித்து மனுக்கள் வாபஸ்..!!
    Featured

    மீண்டும் ஒன்றிணைந்த அதிமுக அணிகள்..!! சபாநாயகரை சந்தித்து மனுக்கள் வாபஸ்..!!

    editor5By editor5May 27, 2026Updated:May 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 50
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் களமிறங்கிய எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினர் இன்று முழுமையாக இணைந்து, கட்சியை ஒன்றிணைத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

    தேர்தலுக்குப் பின்னர், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களான 25 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, கட்சி கொறடா உத்தரவை மீறினர். இதைத் தொடர்ந்து, அந்த 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேசமயம், எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

    “எங்களிடம்தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்; நாங்கள் நியமித்தவரையே கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை வைத்தனர். சபாநாயகருக்கு இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க 90 நாட்கள் அவகாசம் உண்டு. ஆனால், மனு தாக்கல் செய்த தரப்பினர் 15 நாட்களுக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். நாளை (மே 28) வரை அந்த அவகாசம் இருந்த நிலையில், இரு தரப்பும் சமரசப் பாதையில் சென்றுள்ளன. இந்த இடைக்காலத்தில், வேலுமணி தரப்பைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். நான்கு பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

    இந்தப் பின்னணியில் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தின. நேற்று எடப்பாடி பழனிசாமியின் பசுமை வழிச்சாலை இல்லத்தில் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்தனர். பதவிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. “பறிக்கப்பட்ட பதவிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என வேலுமணி தரப்பு வலியுறுத்தியது. ஆனால் எடப்பாடி தரப்பு அதை ஏற்க மறுத்தது. “ஏற்கெனவே அந்தப் பதவிகள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. எனவே திரும்பப் பறிக்க முடியாது. ஆறு மாதங்கள் கழித்து வேறு பொறுப்புகள் வழங்கப்படும்” என பதிலளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் நேற்றைய சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

    இருப்பினும், எம்.எல்.ஏ. பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் வேலுமணி தரப்பினர் உறுதியாக இருந்தனர். இன்று காலை சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், லீமா ரோஸ், அருள்மொழித்தேவன், ரவி மனோகரன், சேகர், திருத்தணி அரி, மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்துக்குப் பின் பேசிய கே.சி.வீரமணி, “அ.தி.மு.க.வில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அனைவரும் ஒன்றாகிவிட்டோம். தாய் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்” என்றார். லீமா ரோஸ் “இரு அணிகளும் இணைப்பு உறுதியாகிவிட்டது” எனத் தெரிவித்தார். சி.வி.சண்முகம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனைக்குப் பின் வேலுமணி தலைமையில் 13 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தது. அங்கு அ.தி.மு.க.வில் முழுமையாக இணைவது என முடிவெடுக்கப்பட்டது. தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், லீமா ரோஸ் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

    சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், அருள்மொழித்தேவன் ஆகியோர் வரவில்லை. மன்னிப்புக் கடிதம் தொடர்பான கோரிக்கை காரணமாக சி.வி.சண்முகம் கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணைப்புப் பேச்சுக்கு இணையாக, சட்டமன்றக் குழு தலைவர் மற்றும் கொறடா தொடர்பான மனுக்களையும், கட்சித் தாவல் சட்டத்தின் கீழான தகுதி நீக்க மனுக்களையும் சபாநாயகரிடம் இருந்து இரு தரப்பும் திரும்பப் பெற்றன. இதன்மூலம் அ.தி.மு.க.வில் நீண்டகாலமாக நீடித்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த இணைப்பால் அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கட்சியின் ஒற்றுமை வலுப்பெற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு இது பெரும் வலு சேர்க்கும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை 10 வயது சிறுமி வழக்கு: காமக்கொடூரர்கள் இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!
    Next Article வரலாற்றுப் பிழையை சரி செய்யுமா ஜோசப் விஜய் அரசு? – எட்டயபுரம் மன்னர் வாரிசின் விடா முயற்சி!
    editor5

    Related Posts

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    May 30, 2026

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.