தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன்தாரருடன் ஆஜராகி ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது..

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று லண்டனுக்கு சென்றுள்ளார். லண்டன் செல்வதற்கு முன்பு மகிழ்ச்சியான செய்தியுடன் சென்றுள்ளார். அவரை சந்தித்து வழி அனுப்ப முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உள்ளது.

பேரம் பேசியது பற்றி  கேட்டபோது. தலைமையில் கேட்டு வழக்கறிஞருடன் ஆலோசித்து அவர் வழிகாட்டுதலுடன் நடவடிக்கை எடுப்போம் முடிவெடுப்போம் என தெரிவித்தார்.  திமுகவை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என்ற வகையில் காவல்துறை விளையாடலாம் என நினைக்கிறார்கள். கத்தி என்பது இரண்டு பக்கமும் கூர்மை உடையது. அது எந்தப் பக்கமும் வெட்டும் என்பதை அவர்கள் காலத்தின் மூலம் அறிவார்கள். தமிழக வெற்றி கழகம் பாஜகவை கண்டு அஞ்சுகிறது திமுகவை அழித்துவிடலாம் என கனவு காண்கிறார்கள் அது எந்த வகையிலும் நடக்காது என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version