Close Menu
    What's Hot

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூரில் 31 பேருக்கு வேலை.. விஜய் குறித்து நாளை என்ன பேசப் போகிறார் அண்ணாமலை? எகிறும் சஸ்பென்ஸ்..!!
    Featured

    கரூரில் 31 பேருக்கு வேலை.. விஜய் குறித்து நாளை என்ன பேசப் போகிறார் அண்ணாமலை? எகிறும் சஸ்பென்ஸ்..!!

    editor5By editor5July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 28 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் ஜூலை 12-ஆம் தேதி (நாளை) மாலை நடைபெறவுள்ள “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டை “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையேற்று நடத்துகிறார். சமூக விழிப்புணர்வு நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாநாடு, அவரது புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, காவல் துறை பணியை ராஜினாமா செய்து அரசியலில் களமிறங்கியவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, குறுகிய காலத்திலேயே தமிழக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தனது கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி காரணமாக அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

    இதையடுத்து அவர் “வீ தி லீடர்ஸ்” என்ற அமைப்பை தொடங்கி, மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னெடுத்தார். இந்த அமைப்பில் தற்போது 19 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.

    பொள்ளாச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த காலத்தின் புகைப்படங்களும், தலைமைத்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலான விளம்பரப் பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டில் மாநில அரசின் செயல்பாடுகள், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள், கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து விரிவாக பேசவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிடும் கருத்துகளும், அடுத்தகட்ட அரசியல் அறிவிப்புகளும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Annamalai we the leaders
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோயில் இடிப்புப் பணியின் போது கோபுரம் சரிந்து அரசு ஊழியர் பலி!. அலட்சியத்தால் நேர்ந்த அவலம்
    Next Article ” தவெக அரசு இந்து விரோத அரசாக மாறிவிட்டது” –  நயினார் நாகேந்திரன் கண்டனம்
    editor5

    Related Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    July 11, 2026

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    July 11, 2026

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.