உலக நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டுக்கான லோகோவிலும் தாமரையை வடிவமைத்து மத்திய பாஜக அரசு நயவஞ்சகம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளன. உலக பிரச்சனைகள், சுற்றுச்சூழல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து இந்த அமைப்பு ஆலோசிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17வது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 18வது மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2026 ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டை நடத்த பொறுப்பேற்றுள்ள இந்தியா, அதற்கான புதிய லோகோவை உருவாக்கியுள்ளது.

BRICS அமைப்புக்கான லோகோ தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தாமரை சின்னத்தை குறிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த லோகோ விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version