சினிமாக்காரர்களை தினசரி சந்திக்கும் முதலமைச்சர் விஜய்க்கு  பெரியபாளையம் தொழிற்சாலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்திக்க நேரமில்லையா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள தனது சமூக வலைத்தளப் பதிவில், ”

கரூரை கைகழுவி விட்டது போல, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா திரு. விஜய்   அவர்களே?

சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா? ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விட்டெறிந்து விட்டால் நமது கடமை முடிந்து விட்டது என அவர்களை சந்திக்காமல் நீங்கள் ஓரம் கட்டுவது என்ன விதமான மனநிலை?

இதுமட்டுமா? சீரழிந்த சட்டம் ஒழுங்கு, கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் பாதுகாப்பு, பெருகிவரும் போதைப் பழக்கம், தவெகவினரின் அராஜகங்கள் என உங்கள் ஆட்சியில் நடக்கும் எந்த பிரச்சினையையும் நீங்கள் கண்டு கொள்வதில்லை என்பதற்கு, ஒரே நாளில் (23/06/2026) மட்டும் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ள கொடூரமே சாட்சி.

இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல், அடுத்த “நீரோ” மன்னன் போல முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள உங்களின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் துவங்கிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version