நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்-கள் மட்டுமே திரும்பப் பெறப்படும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, போராட்டத்தைக் கைவிட எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ , வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்குவோம் என எச்சரித்திருந்தது. இதற்கிடையே, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவ ‘சாட்சி’ (SAAKSHI) என்ற ஆன்லைன் தளத்தையும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சட்ட உதவி நிதியையும் அறிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர்கள், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தினர். அதேவேளையில், போராட்ட களத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.
மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சலில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசு சாதகமான பரிசீலனையில் உள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநில அரசுகள் ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன் கைது செய்யப்பட்ட அமைதியாக போராடிய போராட்டக்காரர்களை விடுதலை செய்யத் தொடங்கியுள்ளன.
