தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் , உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா, காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை மேற்கொள்ளுதல் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என– முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
