கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான கடிகார கோபுரத்தின் ஒரு பகுதி இன்று காலையில் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தின் சிதைவுகள் பிளாட்பாரம் எண் 2 மற்றும் தண்டவாளம் எண் 3-ன் மீது விழுந்தன.

நிகழ்வு நடந்தபோது பிளாட்பாரத்தில் மக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திற்கு அடியில் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, இது விபத்து அல்ல என ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோழிக்கோடு ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாகவே, திட்டமிட்ட அடிப்படையில் இந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தினால் ரயில் போக்குவரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிளாட்பாரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த காட்சி அங்கு இருந்த பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version