காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ள அளவிலான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க முடியாது என்ற கர்நாடக அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத்தர தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) ஜூன் மாதத்திற்கு 9.91 டி.எம்.சி. மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டி.எம்.சி. காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்க முடியாதது.
குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரையில் பங்குக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும்.
