செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலி பகுதியில்  அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையில் ஏற்கனவே முதல் அலகில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும், இரண்டாவது அலகில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீரும் குடிநீராகச் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படுகின்றது.

மூன்றாவதாக 400 மில்லியன் லிட்டர் தண்ணீர் தயாரிக்கு அலகுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 70 சதவிகித கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் விரைவில்  இதனை திறப்புவிழா செய்து சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள  மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழக்க திட்டமிட்டுள்ள நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத் மற்றும்  துறை அதிகாரிகள் முதலமைச்சருடன் ஆய்வு மேற்கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version