வழக்கறிஞராக பதிவு செய்துள்ள பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்கவேண்டும் என காங்கிரஸ் எம்.பி சுதா எதிர்ப்புதெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேர் நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின்னர்  உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த பேரறிவாளன் வழக்கறிஞர் தொழிலை தேர்வு செய்து, கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். கடந்த 27ஆம் தேதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பேரறிவாளன் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் நுழைவதை வழக்கறிஞராக தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் சுதா எம்.பி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான பேரறிவாளன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அவர் கருணை மனு மூலமாகவே விடுதலை பெற்றுள்ளார்

பேரறிவாளனை பார் கவுன்சிலில் பதிவு செய்தது இந்திய நீதித்துறையின் கருப்பு நாளாகும். அவரை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்கவும்,  அவர் பதிவு செய்ய உதவிய அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுதா எம்.பி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version