வாக்கு என்ணும் மையக் கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் படம் பார்த்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் விஜய் தனது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தனது கடைசிப் படமாக ஜனநாயகன் இருக்கும் என அவர் அறிவித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி 9-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டது.

படத்தில் வன்முறையை தூண்டும் வகையிலான காட்சிகள் இருப்பதாக தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

HD பிரிண்ட்டில் படத்தை பலரும் டவுன்லோடு செய்து பார்த்துவிட்டனர். இப்படத்தை டவுன்லோடு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆகினும் படம் காட்டுத்தீயாய் மக்களிடம் பரவியது. படத்தை வெளிவிட்டது யார் என்பது குறித்து விசாரித்து வரும் போலீசார் சிலரை கைதும் செய்துள்ளனர்.

மே 8-ம் தேதி இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், வாக்கு எண்ணும்  மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக ஜனநாயகன் படத்தை பார்த்த சிசிடிவி மெயிண்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு ஜனநாயகன் படம் பார்த்ததாக அவரே புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒப்பந்த ஊழியரான யுவராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version