தென்னிந்திய திரைப்படம் எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

2026-2029ஆம் ஆண்டு பதவிக்கான தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட 21 பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

இயக்குனர் சேரன் தலைமையில் நம்ம கே.பாக்கியராஜ் அணியும், இயக்குனர் வி.சி.குகநாதன் தலைமையில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியும் போட்டியிட்டன.

தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்காளிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 432 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4.15 மணிக்கு நிறைவு பெற்றது. ஜாக்குவார் தங்கத்துக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அனுமதியுடன் அவரும் வாக்களித்தார்.

மொத்தம் 432 வாக்குகள் பதிவான நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.

முதலில் தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படது. இதில் நம்ம பாக்யராஜ் அணி சார்பில் தலைவராகப் போட்டியிட்ட இயக்குநர் சேரன் 270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் வி.சி.குகநாதனுக்கு 155 வாக்குகள் கிடைத்துள்ளன.

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் சேரன் அணி வெற்றி

நம்ம பாக்யராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சேரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version