தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் முத்துசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கலைஞர்  பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில்  உள்ள கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, முத்தமிழறிஞர் கலைஞரின் வழியைப் பின்பற்றித்தான் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்தியதாகக் குறிப்பிட்டார்

தொடர்ந்து தவெக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு விடையளித்தார்.

அப்போது தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்த வாக்குறுதியை விவசாயிகளுக்கு நிறைவேற்றாததால்தான், அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினார். தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை அளிக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்த ஆட்சிக்கு ஆறுமாதம் அவகாசத்தை முதலமைச்சர் கொடுத்திருப்பது என்பது அவசர பிரச்சனைக்கு அல்ல. தமிழகத்தில் தொடர்ந்து  சட்ட ஒழுங்கு பாலியல் குற்றச்சாட்டு நடைபெற்று வருகிறது என்பதை கூறி வருகிறோம்.

சட்டம் ஒழுங்கை சீர் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக தூர்ந்து போன சக்தி என முதல்வர் விஜய் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, கேள்விக்கு திமுக எப்படிப்பட்ட சத்தி என்பவது வரும் தேர்தலில் தெரியவரும் எனத் தெரிவித்தார்.

டாஸ்மாக்கில் ஆங்காங்கே சில தவறுகள் நடந்தாலும் அது தடுக்கப்பட்டதாகவும், ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவிக்கப்பட்டதாகவும் அது கொடுக்கப்படாமல் இருந்தால் இந்த அரசு அதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதாக தவெக அரசு கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு  கடந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை  இந்த அரசைப் பார்க்கச் சொல்லுங்கள் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version