மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்தச் செயல் மாணவர்களின் கோரிக்கைகளைப் திசைதிருப்பும் வகையில் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடி நேற்று இரவு வெளியிட்ட வீடியோவை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மாணவர்கள் தற்பொழுது எதை எதிர்பார்க்கிறார்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாவை மட்டுமே மாணவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்துள்ளனர் என்றும், இந்தச் சூழலில் நள்ளிரவு நேரத்து வீடியோக்கள் மூலம் மாணவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்க வேண்டாம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வன்முறையை ஏவியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version