Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அடுத்த மத்திய அமைச்சருக்கு டார்கெட்..!! உதயமானது E20 ஜனதா கட்சி..!! தொடரும் போராட்டம்!
    Featured

    அடுத்த மத்திய அமைச்சருக்கு டார்கெட்..!! உதயமானது E20 ஜனதா கட்சி..!! தொடரும் போராட்டம்!

    editor5By editor5July 27, 2026Updated:July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 38 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் NEET தேர்வு மோசடிகளுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) நடத்திய போராட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி இழப்புக்கு வழிவகுத்த நிலையில், அதே மாதிரியான ‘காக்ரோச்’ பாணியில் புதிய இயக்கம் உருவாகியுள்ளது. ‘E20 ஜனதா கட்சி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் இயக்கம், மத்திய அரசின் எத்தனால் கலந்த பெட்ரோல் கொள்கைக்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

    இந்த இயக்கம் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரது ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் EBP (Ethanol Blended Petrol) திட்டத்தின்படி, பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 2013-14ல் 1.5%க்கும் குறைவாக இருந்தது. தற்போது 2025-26ல் 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும், இறக்குமதியை குறைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால் E20 ஜனதா கட்சியினர் இந்த கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றனர். பழைய வாகனங்களில் மைலேஜ் குறைவு, என்ஜின் பாகங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களில் அதிக தேய்மானம் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நுகர்வோருக்கு தேர்வு உரிமை வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். புதிய வாகனங்களுக்கு E20, பழைய வாகனங்களுக்கு E10 மற்றும் விரும்புவோருக்கு தூய பெட்ரோல் (E0) ஆகியவை தடையின்றி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், அமைச்சர் நிதின் கட்கரியின் குடும்பத்துக்கு மகாராஷ்டிராவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன என்றும், அவை எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதனை மறுத்துள்ள கட்கரி, “எங்கள் குடும்பம் பல ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகளை நடத்தி வருகிறது. இந்திய எத்தனால் உற்பத்தியில் எங்கள் பங்கு 0.5%க்கும் குறைவு. இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

    ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு தொடங்கப்பட்ட E20 ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் வெகு வேகமாக வளர்ந்து 3 லட்சம் பின்தொடர்பாளர்களை தாண்டியுள்ளது. இந்தப் போராட்டம் பிரதமர் மோடி தலைமையிலான NDA அரசுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

    e20 janata party nitin Gadkari
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் அரசு வேலை ரத்து:  உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு
    Next Article களத்தில் இறங்கிய முதல்வர் விஜய்.. கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் ஆய்வு..!!
    editor5

    Related Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.