இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, மான்செஸ்டரில் உள்ள புகழ்பெற்ற ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா (59), ஸ்ரேயாஸ் அய்யர் (68), ஷிவம் துபே (42) ரன்களை குவித்தனர்.

இதனை தொடர்ந்து விளையாட தயாரான இங்கிலாந்து அணிக்கு மழை பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இடைவிடாமல் பெயத மழையால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு 64 ரன்கள் இலக்காக கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் இதுவும் நடக்கவில்லை. ஏனென்றால், ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்து போட்டி கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது

இந்தநிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் கடும் முனைப்பு காட்டி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் தங்களின் சிறந்த ஆடும் லெவன் வீரர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளன. இந்திய அணி தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையில் சரியான சமநிலையை ஏற்படுத்தி, தொடரை வெற்றிகரமாகத் தொடங்கக் காத்திருக்கிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.

ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது. மழையின் குறுக்கீடு இன்றி முழுமையான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version