தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும். எனவே, இக்கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுமாறு, மாநில பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை சந்தித்து சபாநாயகர் JCD பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, கூட்டத்தொடருக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழை சபாநாயகர் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது, அரசின் நிதிநிலை அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடுவது குறித்தும் ஆளுநருடன் சபாநாயகர் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நிகழ்வாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களின் இக்கேள்விக்கு மறைமுகமாகப் பதிலளித்த சபாநாயகர் JCD பிரபாகர், “கூட்டத்தொடர் தொடங்கும் நாளன்று என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள் என்று சுருக்கமாகக் கூறி சஸ்பென்ஸை நீட்டிக்கச் செய்துள்ளார். புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version