உலகிலேயே தொழில்நுட்பத்திற்கு முன்னோடி நாடு என்றால் அது ஜப்பான் தான். மக்கள் தொகையும் இங்கு அதிகம். அதேப் போல மனிதர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் வித்தியாசமான தொழில்நுட்ப இயந்திரங்களும் அங்கு ஏராளம். இயந்திரம் போல ஓடும் மனிதர்களுக்கு இந்திரங்கள் மூலமே ஓய்வும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பல தயாரிப்புகள் இங்கு நாள்தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது.
இப்போது அடிக்கும் வெயிலுக்கு ஃபிரிட்ஜில் உட்காந்து கொண்டால் நன்றாக இருக்கும் என பலருக்கும் தோன்றியிருக்கும். இல்லையா? அதனை இப்போது நினைவாக்கி இருக்கிறது ஜப்பான். மனிதர்களுகான ஃபிரிட்ஜ்-ஐ கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
தீவிர வெயிலில் வேலை செய்பவர்கள் இந்த அறைக்குள் நுழைந்த 5 நிமிடங்களில் தங்கள் உடல் வெப்பத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். மேலும், இந்த சாதனத்தின் உட்புறம் 15°C வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறது. குறிப்பாக, பயனரின் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதிகளுக்கு 5°C அளவில் குளிர்ந்த காற்று நேரடியாக பரவச் செய்து, உடல் சூட்டை அதிவேகமாகத் தணிக்கிறது.
இது தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை எந்த இடத்திற்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்தலாம். பயனரின் உடல் அதிகக் குளிர்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, இதில் சிறப்புப் பாதுகாப்பு வசதி உள்ளது. இந்த குளிரூட்டும் பெட்டி அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக இயங்கும், அதன் பிறகு தானாகவே ஆஃப் ஆகிவிடும்.
இது வழக்கமான ஏ.சியை விட மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. ஒரு மணி நேரம் இயக்க வெறும் ரூ.9.5 மட்டுமே மின்சாரச் செலவாகும். வணிக ரீதியான பயன்பாட்டிற்கான இந்த சாதனத்தின் விலை 1.5 மில்லியன் ஜப்பானிய யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம்) ஆகும். இந்தியாவில் இப்போது இருக்கும் வெயிலுக்கு இந்த மனித ஃபிரிட்ஜ் மார்கெட்டுக்கு வந்தால், போட்டி போட்டு மக்கள் வாங்குவர்.
