கேரள-தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, தற்போது தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ‘பாகுபலி’, ‘புன்னகை மன்னன்’, ‘ராவணன்’ போன்ற பல பிரம்மாண்ட திரைப்படங்கள் படமாக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சியின் அழகைக் காண, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், தொடர் மழையினால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அபாயகரமான அளவிற்கு அதிகரித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வனத்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் நீர்வீழ்ச்சியில் இறங்கவும், குளிக்கவும் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இதனால், நீர்வீழ்ச்சியின் ரம்மியமான காட்சியைக் காண வரும் பயணிகள், அதில் இறங்க அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மழை தொடரும் என்பதால், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version