Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மனைவியை விருந்தாக்கிய நபர்… சிக்குவாரா திமுக பிரமுகர்?
    Featured

    மனைவியை விருந்தாக்கிய நபர்… சிக்குவாரா திமுக பிரமுகர்?

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2025Updated:May 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கல்லூரி மாணவியை திருமணம் செய்த திமுக நிர்வாகி ஒருவர், திமுக பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக அம்மாணவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். திரைப்பட பாணியில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த10-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் பிறந்தநாள் விழா அரக்கோணத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரவியை, நட்டநடு சாலையில் சந்தித்த மாணவி, தனக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

    இது தொடர்பாக அப்பெண் கொடுத்த மனுவில், ”அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், தன்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 2 மாதம் திருமண வாழ்வு சுமூகமாக சென்றுக் கொண்டிருக்க, திடீரென தெய்வசாயல், தன்னை திமுக பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தினமும் தன்னை கடுமையாக தாக்கினார்”.

    ”மன உளைச்சலில் இருந்த நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என்னை காப்பாற்றிய உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்தனர். ஆனால் தற்கொலை முயற்சி குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தன்னை அழைத்து செல்ல முயற்சி செய்ததோடு, தன்னுடன் வரவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்து விடுவேன்” என மிரட்டினார்.

    அவரது மிரட்டலுக்கு அஞ்சி அவருடன் சென்ற போது, மீண்டும் மீண்டும் தன்னை கொடுமை செய்ததால், நிரந்தரமாக தாய் வீட்டிற்கு வந்து விட்டேன். அத்தோடு எனது கல்லூரி படிப்பையும் தொடர்ந்து வருகிறேன். ஆனால் தெய்வசாயல், தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும், புகார் அளிக்க சென்றால் இது எங்கள் எல்லை இல்லை என அரக்கோணம் காவல்துறையினர் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து அரக்கோணம் தாலுகா காவல்நிலையம், ராணிப்பேட்டை மாவட்ட காண்காணிப்பாளர் அலுவகலத்திலும் புகார் அளித்தேன். அங்கும் எனது புகாரை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தினமும் தன்னை கடித்தும், அடித்தும் ஏற்படுத்திய காயங்களை எம்.எல்.ஏவிடம் காட்டி அழுதுள்ளார் அப்பெண். இதனையடுத்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தெய்வசாயல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    DMK அரக்கோணம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!!
    Next Article சாம்சங் விவகாரம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி.. வாக்குறுதி அளித்த அரசு!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.