தற்போது தமிழில் படங்கள் நடிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. நிச்சயமாக விரைவில் தமிழில் நடிக்க நல்ல கதைகளைத் தேடி வருகிறேன். திறமையான இயக்குநர்கள் எனக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எனக்கு வீடு போன்றது; உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ (Maa Inti Bangaaram), தமிழில் எங்கள் தங்கம் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, நடிகராக இருப்பதை விட, ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகப்பெரிய சவால். கடந்த ஐந்து நாட்களாக ஒரு படத்தைத் தயாரிப்பதில் உள்ள சிரமங்களை நேரடியாக உணர்ந்தேன். இது எனக்குப் புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது” எனக் கூறினார்.
தனது தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) மூலம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். ‘மா இன்டி பங்காரம்’ படத்திற்கு முதலில் சாய் பல்லவியைத்தான் ஒப்பந்தம் செய்ய நினைத்தோம். ஆனால், அவர் பிஸியாக இருந்ததால், கதையில் சில மாற்றங்களைச் செய்து, ஆக்ஷன் காட்சிகளை அதிகப்படுத்தி நானே அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
நடனக் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகள் எனக்கு எளிதாக இருந்தன. அதே சமயம், படத்தில் இடம்பெறும் “நான் யார் தெரியுமா?” என்ற மாஸ் டயலாக் பேச எனக்கு முதலில் கூச்சமாகவும், வெட்கமாகவும் இருந்தது. பல டேக்குகள் எடுத்துதான் அந்தப் பகுதியைச் சிறப்பாக முடித்தேன் என்று வேடிக்கையாகப் பகிர்ந்துகொண்டார். இந்தத் திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
