வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஐசரி கணேசனின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை வேல்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்களுக்கு தடை கோரி அவரின் சகோதரியும், வேல்ஸ் அறக்கட்டளையின் ஆயுள் கால அறங்காவலருமான அழகு தமிழ் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பிரபல மறைந்த நடிகர் ஐசரி வேலனின் நினைவாக கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை வேல்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் ஐசரி கணேசன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அறங்காவலர்களாக இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு தனக்கும் சில அறங்காவலர்களுக்கும் தெரியாமல் வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களை குறைக்கும் வகையில் விதிகளில் மாற்ற செய்ததாகவும், சில அறங்காவலர்களின் ராஜினாமா கடிதங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு, பிற அறங்காவலர்கள் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அறக்கட்டளையின் சொத்துக்கள் தொடர்ந்து அடமானம் வைக்கப்பட்டு, அதன் நிதி பிற நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதால், ஒப்புதலின்றி நடைபெற்ற இந்த நிதிப் பரிவர்த்தனைகளால் அறக்கட்டளையின் கல்வி நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வேல்ஸ் அறக்கட்டளையில் ஏகமனதான ஒப்புதல் இன்றி செய்யப்பட்ட இந்தத் திருத்தங்கள் செல்லாது என்றும் வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களை தணிக்கை  செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் முக்கிய முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளையை நிர்வகிக்க இடைகால நிர்வாகி ஒருவரை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version