தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள நடிகர் ச.ஜோசப் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவரும் நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதலமைச்சரிடம் கொடுத்து வந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் புதிய ஓடிடி தளத்தை தொடங்க வேண்டும்.
4விழுக்காடா விதிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்
திரைப்பட திருட்டை தடுக்கும் பொருட்டு ANTI PIRACY TEAM-உருவாக்க வேண்டும்.
திரையரங்குகளில் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதிக்க வேண்டும்,
படம் வெளியாகி 8 வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிடும் வகையில் மாற்ற வேண்டும்,
தமிழ்நாட்டில் 50சதவீதத்துக்கும் அதிகமான படப்பிடிப்பை நிறைவு செய்யும் இந்திய படங்களுக்கு, அவற்றின் பட்ஜெட்டில் 10சதவீதம் தயாரிப்பு ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்த வேண்டும்
என ஆறு கோரிக்கைகளை கமல்ஹாசன் அளித்து வந்துள்ளார்.
இது திரைத்துரையினருக்கு முக்கியமான கோரிக்கைத்தானே என பலரும் கூறிவரும் நிலையில், கமல்ஹாசன் தனியாகச் சென்று இந்த கோரிக்கைகளை அளித்ததுதான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுமலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் கமல்ஹாசன் மீது ஏகக் கடுப்பில் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
காரணம் இக்கோரிக்கைகளை தமிழ்த் திரையுலகின் ஒட்டு மொத்தக் கோரிக்கைகளாக இவற்றை தமிழ்த் திரையுலகத்தின் சங்கங்கள் ஒன்றிணைந்து முதல்வரிடம் இக்கோரிக்கைகளை சமர்ப்பித்து வேண்டுகோள் விடுத்திருக்கலாம். அதை விடுத்து இப்போது அதற்கிடமில்லாமல் கமல்ஹாசன் தனி ஒருவராக இக்காரியத்தை செய்திருப்பது அவ்வளவு உகப்பானதல்ல என பொங்கிக் கொண்டிருக் கிறார்களாம் தயாரிப்பாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள்.
இனி முதல்வருக்கு வாழ்த்துச் சொல்ல சங்க நிர்வாகிகள் செல்கையில் என்ன கோரிக்கைகளோடு செல்வதென்று கடுப்பில் உள்ளதாகத் தகவல்கள் உலாவருகிறது.

