Close Menu
    What's Hot

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!
    Featured

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    editor5By editor5July 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 45 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூலை 18ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், “பேரவையைப் பூட்டினாலும் முதல்வர் விஜயின் எலும்பை உடைப்போம்” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் பேச்சு தொடர்பாக தவெகவினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்தனர். இந்நடவடிக்கைக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று சந்தித்தார். எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கருணாநிதி, அப்துல் வகாப் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “சிறையில் இருக்கும் மார்க்கண்டேயன் நலமாக உள்ளார். தவெக அரசு விமர்சிப்பவர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரையும் கைது செய்ய முயற்சி நடந்தது” என்றார்.

    மேலும், “தவெக அரசு யூடியூபர்கள் உள்ளிட்ட தன்னை விமர்சிப்பவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப முயல்கிறது. ஜனநாயகத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத இந்த அரசு, காவல்துறையை எதிர்க்கட்சியினரை அடக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது. மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை” என்று குற்றம் சாட்டினார்.

    “ஸ்டாலின் ஆட்சியில் விஜய் எவ்வளவு கடுமையாக விமர்சித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது திமுக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் விஜய்க்கு இல்லை. பயத்தின் காரணமாகவே அவர் அரசியல் செய்கிறார். மோடி பாணியில் ஆட்சி நடத்துகிறார். பாஜக என்ற பெயரைக்கூட சொல்ல அஞ்சுகிறார்கள். எதிர்ப்புக் குரல்களை அடக்கும் விதத்தில் தான் போராட்டக்காரர்களையும் கையாளுகிறார்கள்” என்று கனிமொழி தெரிவித்தார்.

    “தமிழ்நாட்டின் நலன் வந்தால் திமுக எப்போதும் விட்டுக்கொடுக்காது. எந்த காலத்திலும் திமுகவும், அதிமுகவும் நெருங்கி வந்தது கிடையாது” என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தவெக அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

    Kanimozhi Karunanidhi TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை
    Next Article டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு
    editor5

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.