கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை நிகழ்வினைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஆட்சி என எதுவும் உள்ளதா என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி,

பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.

‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என கனிமொழி எம்.பி ஆதங்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version