பயத்தைத் தாண்டியவர்களுக்கு சிறைச்சாலையும், சிம்மாசனமும் ஒன்றுதான் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

அந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, கனிமொழி எம்.பி தனது நினைவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், அச்சத்தைக் கடந்தவர்களுக்கு, சிறைச்சாலையும் அரியணையும் ஒன்றே – பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஓர் அரசால் என் தந்தை கைது செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் நாளன்று, இவ்வார்த்தைகள் எனக்கு வாழ்நாள் பாடமாக அமைந்தன எனக் குறிப்பிட்டுளார்.

சென்னை மத்திய சிறைச்சாலையின் வாசலில் அவர் தனித்து நின்றதாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கானஉடன்பிறப்புகள்அவருடன் நின்று, ஒவ்வொரு தியாகத்தையும் ஒவ்வொரு போராட்டத்தையும் பகிர்ந்துகொண்டனர் எனப் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதி சிறைப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்து கனிமொழி பதிவிட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து முன்னதாக எந்தப் பதிவும் வெளியிடப்படவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version