மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன்  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், வலைப்பேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்டோர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து மிகவும் தரக்குறைவாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தரக்குறைவான பதிவுகள் செய்து சீமான்  நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அவதூறு பிரசாரம். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை.

எனவே, கடந்த ஜூலை.3-ஆம் தேதி அளித்த புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சீமான் மீது தொடர்ந்து அவதூறான கருத்துக்களை இந்த யூ டியூப்பர்  திட்டமிட்டு பதிவு செய்து வருகின்றனர். புகார் மனு அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்க மறுக்கிறது என வாதிட்டனர்.

இதனை தொடர்ந்து நீதிபதி திமுக எம்.எல்.ஏ,  முதல்வர் குறித்து  பேசினால் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்வீர்கள் அதற்கு உங்களுக்கு அதிகாரம் உள்ளது. சீமானை பொருத்தவரை தேர்தலில் தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் தற்போதைக்கு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக உருவாகி உள்ளார் என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இடம் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ்  100 கோடி பெற்றார் என யூடியூபில் பேசியதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சீமான் குறித்து பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி இதற்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது.

இந்த வழக்கை பொறுத்தவரை you tuber,  சீமானை மிகவும் கொச்சையாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர்.  இதனை ஏற்க முடியாது. எனவே சைபர் க்ரைம்  காவல்துறையினர், இன்று மாலைக்குள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வீடியோக்களை நீக்க வேண்டும்  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version