Close Menu
    What's Hot

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல்: ஆத்திரத்தில் பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!
    Featured

    பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல்: ஆத்திரத்தில் பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!

    Editor web2By Editor web2June 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 21 11h08m41s303
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த நபரை சில பெண்கள் செருப்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி ஒருவர், மதுரையிலிருந்து சேலம் நோக்கி திண்டுக்கல் வழியாகச் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பேருந்து நடத்துனரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நடத்துனர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது செல்போன் மூலம் உறவினர்களை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, பேருந்து திண்டுக்கல் அருகே வந்தபோது சிறுமியின் உறவினர்கள் பேருந்தை வழிமறித்து ஏறி, குற்றம்சாட்டப்பட்ட நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் உறவினர்களும் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.

    இந்த தாக்குதலில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன், சில பற்களும் உடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கூடியிருந்த சில பெண்கள் செருப்பால் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த நபரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற பிறகும் நீண்ட நேரம் “சிங்கப்பெண்கள் பாதுகாப்புப் படை” சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ChildSafety Dindigul PublicReaction TamilNaduNews
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article11 பந்துகளில் அரைசதம்.. 29 பந்துகளில் 94 ரன்கள்!. இலங்கை பவுலர்களை திணறடித்த சூர்யவன்ஷி!
    Next Article வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்
    Editor web2
    • Website

    Related Posts

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    June 21, 2026

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    June 21, 2026

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்

    பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல்: ஆத்திரத்தில் பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.