Close Menu
    What's Hot

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!
    Featured

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    editor5By editor5June 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய அரசை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள சண்முகசுந்தரபுரம் ஓடைப்பகுதியில் படர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தொடங்கி வைத்தார். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வேரோடு மரங்களைப் பிடுங்கி அகற்றும் பணியை நேரில் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்து விரிவாகப் பேசினார்.

    வைகோ கூறுகையில், “விமானம் மூலம் தூவப்பட்ட வேலிக்காத்தான் விதைகளால் தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் பெருகி படுநாசத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டுக் கருவேலத்துடன் இவற்றை ஒப்பிடக்கூடாது. இந்த மரங்கள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன. மேலும், 50 முதல் 100 அடி ஆழம் வரை நிலத்தடி நீரை உறிஞ்சும் திறன் கொண்டவை. பறவைகள் இவற்றில் கூடு கட்டுவதில்லை; ஆடு, மாடுகள் இவற்றின் நிழலில் நின்றால் கூட சினை பிடிப்பதில்லை. இத்தகைய பாதகமான ‘பிசாசுச் செடியை’ அகற்ற வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கில் நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டனர்” என்றார்.

    மரங்கள் வெட்டினால் மீண்டும் முளைக்கும் என்பதால், வேரோடு அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, மாநில அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் இப்பணியில் ஈடுபடவும், விரிவான திட்டத்தை உருவாக்கவும் வலியுறுத்தினார். மதிமுக வெறும் தேர்தல் கட்சி அல்ல என்று தெரிவித்த அவர், “முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுடன் களத்தில் நின்ற கட்சி மதிமுகதான். ஆனால், இத்தகைய முக்கியப் போராட்டங்களைச் செய்தி ஊடகங்கள் பெரிதாகக் காட்டுவதில்லை. மாலை நேர அரசியல் விவாதங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன” என்று விமர்சித்தார்.

    மேகதாது அணை விவகாரம் குறித்தும் வைகோ தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார். “கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஒருமித்த தீர்மானம் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் இது மட்டும் போதாது. கர்நாடகாவுக்கு பின்னணியில் இருந்து தூண்டிவிடுவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான். தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்யும் மோடி அரசை முழுமுதல் வில்லன் எனக் குற்றம் சாட்டுகிறேன்” என்றார். 1965-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தைப் போன்று ஜாதி, மதம், கட்சி பேதமின்றி மாணவர்கள், இளைஞர்கள், தமிழக மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று வைகோ ஆவேசமாக வலியுறுத்தினார்.

    MDMK Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!
    Next Article வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.
    editor5

    Related Posts

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    June 20, 2026

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    June 20, 2026

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    நான் மிகவும் போற்றும் உலகத் தலைவர்கள் இவர்கள்..!! யாரை சொல்கிறார் அதிபர் டிரம்ப்..??

    லண்டனில் அதிர்ச்சி சம்பவம்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.